Thursday, March 23, 2006

பழமொழிகள்

திருப்தியுள்ள மனமே தீராத விருந்து.

பிறருக்கு நீ கொடுக்கும் பிச்சை, நீ பெருவது பேரின்பம்.

ஒரு நிமிடக் கோபம் ஓராயிரம் வருடப் புகழையும் அழித்துவிடும்.

உன் எதிரியின் புன் சிரிப்பை நம்பாதே!

உன் உள்ளம் எப்படியோ அப்படியே உலகம்.

தூய அன்பு அமைதிக்கு இருப்பிடம்.

ஒருவனால் செய்ய முடிந்ததை எல்லோராலூம் செய்ய முடியும்.

அதிகாரத்தினால் சாதிக்க முடியாததை அன்பினால் சாதிக்கலாம்.

கொடுக்காத கடன்கள் வாங்கிய பவங்கள்.

தாழ்விலே பெருமையும் வாழ்விலே தாழ்மையும் வேண்டும்.

வாழ்க்கையின் துன்பங்களுக்கு புகழ் ஓர் எளிமையான பிரதிபலன்.

வருமைல் நிறவு காண்பவனே மிகப்பெரிய பணக்காரன்.

பிள்ளை அருமை பெற்றவளுக்குத்தான் தெரியும்.

நாளைய வாழ்க்கை தாமதமானது, இன்றே வாழவும்.

நடத்தையே மனிதனை உருவாக்குகிறது.


செயலே புகழ் பேசும்.


அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.

கேட்பதால் ஒருவர் கற்கிறார்.

உண்மையைவிட நம்பத் தகுந்த பொய்கள் உண்டு.

அறிவு தலைக்குக் கிரீடம், அடக்கம் காலுக்குக் செருப்பு!

தன்னை வெல்ல முடிந்தவனே மிகப்பெரிய வீரன்.

வீரன் வீழலாம், ஆனால் பணியமாட்டான்.

இனிய முகம் உறவை வளர்க்கும்.

செய்வதை திருந்தச் செய்.

ஜனாதிபதியின் எளிமை

ஜனாதிபதியின் எளிமை

இந்திய குடியரசு தலைவர்களில் மிகவும் வித்தியசமானவர் அப்துல்கலாம். ஜனாதிபதியக பதவியேற்ற பின்னர் குடியரசு தலைவர் மாளிகையின் நடைமுறைகளையே மாற்றி அமைத்து விட்டார். இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளின் கையிலும், மாணவ-மாண்விகள் கையிலும் தான் இருக்கிறது என்ற கொள்கையில் மிகவும் உறுதியாக இருப்பவர். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக இவர் பள்ளிக் குழந்தைகளை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

எந்த ஒரு செயலுக்கும் தான் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாகவும் இருந்து வருகிறார். ஜனாதிபதி பதவிக்கு உரிய பகட்டுகள் எதையும் அவர் விரும்பியதில்லை. தனது பணிகலை எப்போதும் போல செய்து வருவதுடன் ஆடம்பரத்தையும் அவர் தவிர்த்து வருகிறார்.

பொதுவாக ஜனாதிபதியாக இருப்பவர்கள் உடை, காலணி அணியும் போது அவர்களுக்கு உதவி செய்ய பணியாளர் ஒருவர் இருப்பார். ஜனாதிபதியாக இருப்பவர் குனிந்து தனது ஶூக்களை அணிந்து கொள்ள சிரமப்படக்கூடாது என்பதற்காக உதவியாளர் ஒருவர் ஶூக்களை அணிந்து விடுவார், ஆனால் நமது இந்திய ஜனாதிபதி கலாம் அவர்கள் இந்த பதிவிக்காக ஒரு உதவியாளர் தேவை இல்லை என்று கூறிவிட்டார். மேலும் எனது வேலையை நானே செய்து கொள்கிறேன் என்றும் தெரிவித்து விட்டார். உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடு சென்றாலும் கலாம் இந்த எளிமையை பின் பற்ற தவறுவதில்லை.

சமீபத்தில் அவர் மியான்மார் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது அங்கு யாங்கூன் நகரில் உள்ள முகலாய வம்சத்தின் கடைசி மன்னர் பகதூர்ஶா நினைவிடத்துக்குச் சென்றார். அங்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது வாசலில் தனது காலணிகலை கழற்றி வைத்து விட்டுச்சென்றர். அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பியதும் சாதாரணமாக நாற்காலி ஒன்றில் அமர்ந்து தனது ஶூக்களை மாட்டிக் கொண்டார். இந்த காட்சியை அந்த நாட்டு மக்கள் பார்த்து வியந்தனர்.

நன்றி தமிழ் தோட்டம்

Thursday, March 16, 2006

தமிழர்கள் அணிந்து வந்த நகைகளின் பெயர்

1. தலையணி:
தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.

2. காதணி:
தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,
கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.

3. கழுத்தணிகள்:
கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,
நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. புய அணிகலன்கள்:
கொந்திக்காய்.

5. கை அணிகலன்:
காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.

6. கைவிரல் அணிகலன்கள்:
சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.

7. கால் அணிகலன்கள்:
மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.

8. கால்விரல் அணிகள்:
கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.

9. ஆண்களின் அணிகலன்கள்:
வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைநாண்,
பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம்,
கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,
முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.

(குறிப்பு உதவி)..நன்றி: தமிழ் நாட்டு அணிகலன், சாத்தான் குளம் அ. இராகவன்)

Wednesday, March 15, 2006

நகைச் சுவை

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் ஆசிரியர் குழந்தைகளை முதல் நாள் விசாரித்துக்கொண்டிருந்தார். யார் யார் எந்த நாட்டுக்காரர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார் ..

கடைசியாக ஒரு சிறுமியிடம் கேட்டார் .. " நீ யார்.. ? "

அந்தச் சிறுமி சொன்னாள் .."... நான் ஒரு இந்தியன் ... "

டீச்சர் சந்தேகமாகக் கேட்டார் .." நீ ஒரு அமெரிக்கன் என்றல்லவா நான் யூகித்தேன் "

சிறுமி சொன்னாள்.. ." இல்லைங்க .. டீச்சர்.... என் அம்மா ஒரு இந்தியர் , என் அப்பா ஒரு இந்தியர் .. எனவே நானும் இந்தியர் "

டீச்சர் கொஞ்சம் கிண்டலாக..
" உன் அம்மா முட்டாள் , அப்பாவும் முட்டாள் என்றால் நீ யார் ... ?"

சிறுமி சிரித்துக்கொண்டே சொன்னாள்... " ... ம் ... அப்படியானால் நான் ஒரு அமெரிக்கனாக இருப்பேன் ..."

பொன் மொழிகள்

* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.

* நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.

* சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.

* மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.

* உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.

* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.

* நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.

* உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.

ஒரு கூண்டு ..... இரு வாசல்கள் ....

அறிஞர் ஐசக் நியூட்டன் கடைசிவரை திருமணமே செய்யவில்லை. தனியாகவே வாழ்ந்து வந்தார். பூனைகள் என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியம். அவர் இரு பூனைகளை வளர்த்து வந்தார். ஒரு முறை அந்தப் பூனைகளுக்கு ஒரு கூண்டு செய்ய எண்ணி கூண்டு செய்பவரைக் கூப்பிட்டு ஒரு கூண்டு செய்யும்படியும், மறக்காமல் அந்தக் கூண்டில் சிறியதாக ஒரு வாசலும், பெரியதாய் ஒரு வாசலும் வைக்கவும் என்று சொன்னார்.. கூண்டு செய்பவர் ஒன்றும் புரியாமல் ஏன் இரு வாசல்கள் என்று கேட்டார் .

நியூட்டன் சொன்னார் "ஒரு வாசல் பெரிய பூனைக்காக மற்றொன்று சிறிய பூனைக்காக "

கூண்டு செய்பவர் சிரித்துக் கொண்டே சொன்னாராம். பெரிய வாசல் வழியாகவே சிறிய பூனையும் வந்து செல்லமுடியுமே!