Friday, July 28, 2006

இன்டர்நெட்டை விழுங்கப் போகும் சூப்பர் வைரஸ்?

வைரஸ் புரோகிராம்களை எழுதும் கம்ப்யூட்டர் கிரிமினல்கள் "தாங்கள் ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் இன்டர்நெட்டையே கைக்குள் போட்டுக் கொள்ள முடியும்". அதிர்ச்சியாக இருக்கிறதா? இது மூன்று பெரிய த.தொ. துறை நிபுணர்கள் ஆராய்ச்சி நடத்திக் கண்டுபிடித்த விஷயம்.

இன்டர்நெட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு கோடி கம்ப்யூட்டர்களை சில மணி நேரங்களில் தாக்கி செயலிழக்க வைக்கக் கூடிய மிக ஆபத்தான சூப்பர் வார்ம் (வார்ம் என்றால் அளவில்லாமல் குட்டி போடும் வைரஸ் வகை) ஒன்றை வெகு சீக்கிரத்தில் எதிர்பார்க்கலாம் என்று இந்த நிபுணர்கள் சொல்கிறார்கள்.

சமீபத்தில் தாக்கிய SQLsnake என்ற வார்ம் இது வரை 6 லட்சத்திற்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களைத் தாக்கி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இது வரை நெட்டைத் தாக்கிய டிஜிட்டல் கிருமிகளிலேயே இதுதான் மிக வலுவானது. இதை விட ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

"ஒரு கிரிமினல் பத்து லட்சம், அல்லது 10 மில்லியன் (ஒரு கோடி) இன்டர்நெட் ஹோஸ்ட்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும்" என்கிறது ஒரு அறிக்கை. இந்த அறிக்கையைத் தொகுத்தவர்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனமான சிலிக்கன் டிஃபென்ஸின் ஸ்டூவர்ட் ஸ்டானிஃபோர்ட், ஐ.சி.எஸ்.ஐ. இன்டர்நெட் ஆராய்ச்சி மையத்தின் வெர்ன் பாக்ஸன், பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் நிக்கோலஸ் வீவர்.

"கிரிமினல்கள் அப்படி கைக்குள் போட்டுக்கொண்டுவிட்டால் அந்த கம்ப்யூட்டர்களை வைத்து பிரம்மாண்டமான அளவில் டிஸ்ட்ரிப்யூட்டட் டினையல் ஆஃப் சர்வீஸ் (ddos) தாக்குதல்களைத் தொடுக்க முடியும். அது மட்டுமல்ல - ரகசியமான, முக்கியமான தகவல்களைத் திருடவோ சேதப்படுத்தவோ முடியும், மேலும் நுணுக்கமான முறைகளில் ஒரு நெட்வொர்க்கைக் குழப்பித் தொந்தரவு செய்ய முடியும்" என்கிறது அந்த அறிக்கை.

"How to 0wn the Internet in Your Spare Time" என்ற இந்த ஆராய்ச்சிக் கட்டுரை (டி-வுக்கு பதிலாக ஜீரோ போடுவது கம்ப்யூட்டர் கிரிமினல்களின் பழக்கம்), இந்த வருட ஆகஸ்ட்டில் நடக்கப் போகும் யூஸ்னிக்ஸ் பாதுகாப்பு கருத்தரங்கத்தில் அவர்கள் படிக்கப் போகும் ப்ரெசன்டேஷனின் முன்னோட்டம்.

SQLsnake, Code Red, Nimda போன்ற வலைமுழுங்கி வைரஸ்கள் இனி இன்டர்நெட்டிற்கு என்னவெல்லாம் ஆகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தான் என்கிறது

ஃபுஜிட்°சு நிறுவனம் இந்தியாவில் சாஃப்ட்வேர் மையம்

சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ஃபுஜிட்சு இந்தியாவில் அதன் ஆஃப்ஷோர் மென்பொருள் தயாரிப்பு மையத்தை அமைக்கிறது. இந்த நிறுவனம் ஆண்டிற்கு ரூ.4,500 கோடி விற்று முதலை கொண்டுள்ளது.

இந்த மையம் ஐதராபாத்தில் துவங்கப்படும் என்றும் இதன் செயல்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்ப்பதாக அந்த நிறுவன மூத்த துணைத்தலைவர் சாய் சீ காங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிறுவனம் பூனாவிலும் மையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரூ. 2,000 கோடி டாலரை வருவாயாக பெற்று வருகிறது. பெங்களூரில் இந்த நிறுவனம் அதன் இரண்டாவது அலுவலகத்தை திறந்துள்ளது.

செர்வர், கம்ப்யூட்டர் சேமிப்பு பொருட்கள், நோட் புக்° என்று அழைக்கப்படும் லேப்-டாப்கள், ஆகியவற்றில் இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடிக்க இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. செர்வர்களுக்கான இந்திய சந்தையில் 5 சதவீதத்தை ஃபுஜிட்சு பிடிக்க திட்டமிட்டுள்ளது.

Tuesday, July 25, 2006

சிகரத்தை நோக்கி

சிகரத்தை நோக்கி

(தலேட்டா சுரேந்தர் குமார்)

இணையதளங்கள் இந்தியாவில் ஆழமாக வேரூன்றி உள்ளன. ஆனால் ஆங்கிலத்தை தவிர வேறு மொழிகளில் அவை இல்லாமல் இருந்தால் அதன் தாக்கம் எப்படி இருக்க இயலும்? நாட்டில் இணைய தளங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு அதனை அணுகுவதற்கும் பெறுவதற்குமான வசதி குறைவு என்பதோடு உள்ளூர் மொழிகளில் அது குறைந்த அளவில் இருப்பதும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ராப்டார்.காம் (சயகவயயச.உடிஅ) என்னும் இந்தியின் முதல் தேடு பொறியை (ளுநயசஉh நுபேiநே ) உருவாக்கிய டெல்லியை சேர்ந்த இன்டிக° நெட்லாப்° நிறுவனத்தின் இயக்குனர் லவீஷ் பண்டாரி இந்தி மற்றும் இதர உள்ளூர் மொழிகளில் இணையதளங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றாலும் ஒருங்கிணைப்பு இல்லாததே உண்மையான பிரச்சனை என்று கூறுகிறார்.

இந்தியில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் இணையதளங்கள் உள்ளன ஆனால் அவற்றில் 85 சதவிகிதம் ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் கொண்டவை. செய்தி அடிப்படையிலான ஒரு சில இணையதளங்கள் தவிர மற்ற அனைத்தும் வர்த்தக அடிப்படையற்ற சுயநிதி அல்லது தனிப்பட்ட இணையதளங்கள் ஆகும். மற்ற அனைத்தும் கல்வி அடிப்படையிலானவை அல்லது அரசு இணைய தளங்கள் ஆகும் என்கிறார் பண்டாரி. எனினும் ஈநாடு.நெட் மற்றும் வெப்துனியா.காம் போன்ற வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற நிறுவனங்கள் பிராந்திய மொழிகளிலான இன்டெர்நெட் நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்பு இருப்பதை உணர்த்தியுள்ளன.

மொழியைப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதும் வெப்துனியா.காம்-ன் குறிக்கோள். 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட வெப்துனியா.காம் உலகின் முதல் உள்ளூர் மொழியில் ஈமெயில் அனுப்பும் (தற்போது 11 மொழிகளில் உள்ளது) சேவை அளிக்கும் ஈபத்ரா.காம்-ஐ அறிமுகப்படுத்தியது. இன்று ஈபத்ராவை 15 லட்சம் பதிவு பெற்ற பயனீட்டாளர்கள் பயன்படுத்தி வருவதாக வெப்துனியா ஆசிரியர் ஜெய்தீப் கார்னிக் கூறுகிறார். வெப்துனியா 1999 செப்டம்பரில் பிராந்திய மொழியில் அரட்டை (ஊhயவ) செய்வதற்கான ஈவார்த்தாவை அறிமுகப்படுத்தியது.

2000-வது ஆண்டில் அது தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் முறையே வெப்உலகம்.காம் வெப்பிரபஞ்சம்.காம் வெப்லோகம்.காம் ஆகிய இணையதளங்களை அறிமுகப்படுத்தியது. தோராயமாக மாதம் ஒன்றுக்கு தமது அனைத்து இணைய தளங்களிலும் 65 மில்லியன் பக்கங்கள் பார்வையிடப்படுவதாக வெப்துனியா கூறுகிறது.

இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களை நாங்கள் குறிவைத்துள்ளோம். எங்களது பயனீட்டாளர்களில் 75 சதவிகிதம் உள்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள். 50 சதவிகிதம் பேர் பெருநகரங்களுக்கு வெளியே பக்பாத் பாராமதி சாகர் காண்ட்வா ஜந்த் போன்ற தொலைதூர ஊர்களில் வசிப்பவர்கள் என்கிறார் கார்னிக். வெப்துனியாவை நோக்கி இணையதளம் பயன்படுத்துபவர்களை இழுப்பது எது?

தங்கள் சொந்த மொழிலேயே செய்திகளையும் கருத்துக்களையும் அறிந்து கொள்ள விரும்பும் அர்ப்பணிப்பு தன்மை உடையவர்கள் 80 சதவிகிதம் பேர். மீதமுள்ளவர்கள் தங்கள் தாய்மொழியில் மிகுந்த ஈடுபாடும் பிராந்திய மொழி இணையதளங்களை பார்வையிட விருப்பமும் உடையவர்கள் என்கிறார் கார்னிக்.

Monday, July 17, 2006

வெள்ளைப்பூண்டு

வெள்ளைப்பூண்டின் மாபெரும் சிறப்பு நோய்க்கிருமிகளை உடனுக்குடன் அழிப்பது. 400 விதமான இரசாயனப் பொருட்கள் வெள்ளைப்பூண்டில் கலந்திருப்பதாக ஜீன் கார்பெட் என்பவர் கூறுகிறார். இவர் எழுதிய ‘முதுமை அடைவதை இப்போதே நிறுத்துங்கள்’ என்ற நூலில் இந்த 400 இரசாயனப் பொருட்களில் பெரும்பாலானவை உடல் திசுக்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்து உடலை இளமைத் துடிப்புடன் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் என்கிறார்.

ஆயுர்வேத மருத்துவத்தில் முடி நன்கு வளரவும், வெண்புள்ளிகள் மறையவும் தினமும் வெள்ளைப் பூண்டு சாப்பிடச் சொல்கின்றனர்.

பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது ‘டெட்டிராசிலின்’ ஆகிய மருந்துகளில் சக்தி வாய்ந்த, பூண்டில் உள்ள ‘அலிசின்’ என்ற பொருள் உள்ளது. காசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அலிசின் அறவே ஒழித்துவிடுகிறது.

மீண்டும் இளமையைப் புதுப்பித்துத் தருவதில் வெள்ளைப்பூண்டு சிறந்து விளங்குகிறது. இரத்தத்தில் உள்ள நோய் நுண்ம நச்சூட்டுப் பொருள்களை வெளித்தள்ளி விடுகிறது. இரத்தத்திற்கு மீண்டும் வீரியம் ஊட்டி, இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது. உடலின் வெப்பநிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது. இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள்ள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட வைக்கிறது.

ஐந்து பூண்டுப் பற்களை எண்ணெயில் வதக்கி தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. சமையலில் அதிகம் சேர்க்கவும். மூன்று பூண்டுப் பற்களைப் பாலில் காய்ச்சி அருந்திவிட்டு இரவில் படுப்பது நல்லது.

பூண்டில் உள்ள சல்ஃபர் உப்பு ஆரோக்கியமான தோல், முடி, நகங்கள் பெற உதவுகிறது. உடலில் உள்ள குப்பைகளையும் விஷமான பொருட்களையும் உடனே வெளியேற்ற உதவுகிறது. தோல் சுத்தமாக, பளபளப்பாக, ஒளிரும் விதத்தில் பாதுகாக்கிறது. அதற்காக B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுடன் இணைந்து தோலை மிகவும் ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. கல்லீரலின் பணிகளும் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

சல்ஃபர் உப்பைப்போலவே அயோடின் உப்பும் பூண்டில் அதிகம் உள்ளது. தைராய்டு சுரப்பியில்தான் அயோடின் உப்பு சேமிப்பாக உள்ளது. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் உப்பு குறைந்தால் ‘தைராக்ஸின்’ சுரப்பது குறையும். வளர்சிதை மாற்றத்திலும் திசுக்கள் ஆக்ஸிஜனை உபயோகித்துக் கொள்வதிலும் தைராக்ஸின்தான் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இதயம் சீராகத் துடிக்கிறது. சிறுநீர் மூலம் கால்சிய உப்புக்கள் வெளியேறவும் உதவி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மூளையை விழிப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே, தினமும் 5 பூண்டுப் பற்களாவது சாப்பிடுங்கள். மீன், முட்டை போன்றவைகூட சாப்பிடாத சைவ உணவுக்காரர்களுக்கு இந்த அயோடின் உப்பு வெள்ளைப்பூண்டு மூலம்தான் நன்கு உடலுக்குக் கிடைக்கும்.

இளமை காக்கும் உணவு முறைகள்! (தக்காளி)

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் அரிய பழம் இது. தக்காளியில் உள்ள சிட்ரிக், பாஸ்போரிக், மாலிக் ஆகிய அமிலங்கள் இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றன.

புற்று நோயைத் தவிர்க்கும் பி1 (P1) என்ற பொருளும், உடலுக்கு நிறத்தையும் மனதிற்குத் துடிப்பையும் வழங்கும் ‘லைகோபென்’ என்ற பொருளும் தக்காளியில் உள்ளன.

கலோரி குறைவாக உள்ள பழம் இது. உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளலாம். தினமும் 5 பழங்கள் சாப்பிட்டுவந்தால் உடல் எடை இரண்டே மாதத்தில் குறைந்து விடும். இத்துடன் உடலின் எந்தப் பகுதியில் எந்தவிதமான நோய்க்கிருமி இருந்தாலும் அந்த விஷக்கிருமிகளை அப்புறப்படுத்தி, சிறுநீரை நன்கு வெளியேறச் செய்து, அதன் மூலம் நோய்க்கிருமிகள் அனைத்தையும் உடலிலிருந்து வெளியேறச் செய்துவிடும். இதனால் கச்சிதமான தோற்றத்தில் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

தக்காளியில் வைட்டமின் A, வைட்டமின் C, பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிக அளவு உள்ளன. எனவே, தக்காளிச்சாறை உணவு சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு அருந்தினால் சாப்பாடு குறைவாகச் சாப்பிடலாம். போதிய சத்துணவும் தக்காளிச் சாறு மூலம் கிடைத்துவிடுவதால் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

நடுத்தர மக்களின் அரிய பழம் இது. ஆப்பிள், பப்பாளி, திராட்சையை விட விலை குறைவு என்பதால் தக்காளிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு இளமையை எளிதில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஏனென்றால், யூரிக் அமிலம் என்ற விஷ அமிலம் அப்புறப்படுத்தப்படுகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது தக்காளிச் சாறு.

தக்காளிச் சாறுடன் காரட் அல்லது பீட்ரூட் சாறு அருந்துவது நல்லது. முதுமையிலும் கண்பார்வை தெளிவாக இருக்க வைட்டமின் A நிறைந்த தக்காளிச் சாறு அதிகம் உதவும்.

உலகை பயமுருத்தும் ஓசோன் படலம்

அவ்வப்போது விஞ்ஞானிகள் பயமுருத்தும் விசயங்களில் ஒன்று ஓசோன் அபாயம். இது பாமர மக்களுக்கு புரியாத பெயராக இருக்கலாம்.

ஒசோன் ஒரு பாதுகாப்பான உறை ஆனால் நாம் அதை அழிக்கிறோம்.

அகவே நாம் ஓசோனை எவ்வறு பாதுகாப்பது என்பதை பற்றி உங்களுக்கு திரிந்த விளக்கங்களை தெரிவிக்கவும்.

Friday, July 14, 2006

தூங்க வைக்கும் வியாதியைப் பரப்பும் ஈ

உலகில், பாலை நிலங்களிலும் வேறு நாடுகளிலும் ஒருவகையான ஈக்கள் வாழ்கின்றன.
இந்த ஈக்கள் மனிதனைக் கடித்து விட்டால் தூக்கம் வந்து விடும்.

அந்த ஈயை ட்ஸெட்ஸே ஈ என்று அழைக்கின்றனர்

Monday, July 10, 2006

தவறுக்கு கிடைத்த தண்டனை

ஜிடானே நடந்து கொண்ட விதம் ! - மிகவும் அசிங்கமாக, அதிர்ச்சியாக இருந்தது. அவர் மேல் இருந்த மரியாதை எல்லாம் போய் விட்டது. மிகவும் திட்டமிட்டு, மட்டெராஸியை சரியாக நெஞ்சில் முட்டிய விதம் - கிட்டத்தட்ட கொலைமுயற்சிக்கு சமம்.

ஆகவே அவருக்கு சிகப்பு அட்டை கொடுத்தது சரியே

மனிதர்களால் அழிக்க முடியாத விலங்கு

மனிதர்கள் எவ்வளவுதான் அறிவாளிகளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனாலும் எதிர் வர இருக்கும் ஆபத்தை எல்ல மனிதர்களாலும் அறிந்து கொள்ள முடிவதில்லை. அல்லது எந்த மனிதனாலும் உணர முடிவதில்லை.

ஆயினும் தம்மை அழிக்க எவராவது முயற்சித்தால் அதைச் சட்டென்று இனம் பிரித்து உணர்ந்து அவ்விபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரு விலங்கு முன் எச்சரிக்கயுடனே நடந்து கொள்ளுகின்றது. அவ்விலங்கின் பெயரைச் சொன்னாலே ஆச்சரியமாக இருக்கும். ஆம் அதுதான் எலி!

மனிதன் எவ்வளவு முயற்சித்தலும் அதை உணர்ந்து அவ் ஆபத்திலிருந்து சட்டென்று தப்பிச் செல்லக்கூடிய ஆற்றல் உடையது எலி.