Monday, October 25, 2010

இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction

இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
    Post by சங்கவி Yesterday at 5:33 pm
    இதயமானது விசேடமாக திரிபடைந்த இதயத் தசைக்கலங்களால் ஆனது இதில் இரண்டு சோணையறைகைள் 2 இதயவறைகள் உள்ளடங்கலாக இதயப் பெருநாடி சுவாசப் பெருநாடி சுவாச நாளங்கள் மேற் பெருநாளம் கீழ் பெருநாளம் இதயத்திற்கு குருதியை வழங்கும் முடியுரு நாடித்தொகுதி என்பன இதில் அடங்கும். இதயவறைகளுக்கும் சோணையறைகளுக்கும் இடையே வலது இட்து பக்கங்களில் முறையே இருகூர் வால்வு முக்கூர் வால்வு என்பன காணப்படும். பெருநாடியும். சுவாசப்பெருநாடியும் ஆரம்பிக்கும் இடத்தில் அரைமதி வால்வுகள் உள்ளன. இதயத்தசையானது தன்னிச்சையாக கணத்தாக்கத்தை உருவாக்கி சுருங்கி விரியக் கூடியது. இந்தக் கணத்தாக்கமானது வலது சோணையறையிலிருந்து ஏனைய தசைகளுக்கு சிறப்படைந்த கணத்தாக்க கடத்தல் தொகுதியால் கடத்தப்படும். இதன் போது சோணையறைகள் சுருங்கும் போது இருகூர் முக்கூர் வால்வுகள் திறந்து இதயவறைக்கு இரத்தம் செல்லும். பின்பு இதயவறை சுருங்கும் போது இவ் வால்வுகள் மூடிக்கொள்ள அரைமதி வால்வுகள் திறப்பதனால் பெருநாடிகளுக்குள் செல்லும். இதயப் பெருநாடியினூடாக செல்லும் இரத்தம் உடற் பாகங்களுக்கும் சுவாசப் பெருநாடியினூடாக செல்லும் இரத்தமானது முடியுரு நாடி ஊடாக வழங்கப்படும். நுரையீரல்களில் ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியானது சுவாச நாளங்கள் ஊடாக இடது சோணையறைக்கும் உடலின் ஏனைய பாகங்களில் இருந்து வரும் ஒட்சிசன் குறைந்த மேற்பெரு நாளம் கீழ்பெருநாளம் என்பவற்றின் ஊடாக குருதி வலது சோணை அறையையும் அடையும். இதயத்தில் நோயை தீர்மானிக்கும் ஆபத்தை கூட்டும் காரணிகள் ஆவன பரம்பரை அலகுகள் வயது அதிகரித்தல். ஆண்பால் புகைத்தல் உயாகுருதியழுத்தம் குருதியில் அதிகளவு கொலஸ்ரொல் காணப்படல் அதிக உடற்பருமன் போன்றவையாகும. அத்துடன் தொழிற்பாட்டு ரீதியாக வால்வு வளையங்கள் விரிவடைதல் வால்வு வளையங்களில் கல்சியம் படிதல் ருமற்றிக் காய்ச்சல் வால்வுகளில் இதய அகவணியில் நோய்த் தொற்று வால்வை தாங்கும் நார்தசைகள் அறுதல் இதயத்தசை நோய்கள் பிறப்பில் வால்வு கோளாறு ஆகியனவும் இதயத்தில் நோயை உருவாக்கும்.

    Wednesday, September 08, 2010

    ‌நீ‌ங்க‌ள் செலவா‌‌ளியா?

    எ‌ல்லோருமே புல‌ம்புவது ஒ‌ன்றே ஒ‌ன்றுதா‌ன். அதாவது, எ‌வ்வளவுதா‌ன் ச‌ம்பா‌தி‌த்தாலு‌ம் எது‌வுமே கை‌யி‌ல் ‌நிலை‌ப்ப‌தி‌ல்லையே எ‌ன்று.. இ‌ப்படி புல‌ம்ப‌க் காரண‌ம் நா‌ம் செலவ‌ழி‌க்கு‌ம் ‌வித‌ம்தா‌ன்.

    செலவ‌ழி‌க்காம‌ல் வாழ முடியாது. ஆனா‌ல், தேவையான அளவு பண‌த்தை செல‌வ‌ழி‌த்து‌வி‌ட்டு ‌மி‌ச்ச‌த்தை சே‌‌மி‌த்து வை‌க்கவு‌ம் முடியு‌ம்.


    webdunia photo
    WD
    அத‌ற்கு ‌சில வ‌ழிக‌ள் உ‌ள்ளன. அதாவது, ஒ‌வ்வொருவரு‌ம் அவ‌ர்க‌ள் செல‌விடு‌ம் தொகையை ஒரு நோ‌ட்டு‌ப் பு‌த்தக‌த்‌தி‌ல் எழு‌தி வர வே‌ண்டு‌ம். இது எத‌‌ற்கு எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌சி‌ந்‌தி‌க்கலா‌ம். எழுது‌ம் போதுதா‌ன் நா‌ம் எ‌த்தனை தேவை‌யி‌ல்லாத செலவுகளை‌ச் செ‌ய்‌கிறோ‌ம் எ‌ன்பது ந‌ம் மன‌தி‌ல் ப‌தியு‌ம். மேலு‌ம், அடு‌த்த முறை ‌சில செலவுகளை எ‌ப்படி சமா‌ளி‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் ஒரு யோசனை ‌பிற‌க்‌கு‌ம்.

    நமது வரவு‌ம், செலவு‌ம் ச‌ரியாக இரு‌க்கு‌ம் எ‌ன்றா‌ல், எ‌ந்த ‌இட‌த்‌தி‌ல் செலவை குறை‌க்கலா‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் ‌தீ‌ர்மா‌‌னி‌த்து‌க் கொ‌ள்ள வ‌ே‌ண்டு‌ம். அ‌ந்த செலவை ஒரேயடியாக ‌நிறு‌த்‌தி‌விடலா‌ம், ‌சி‌றிது ‌சி‌றிதாக‌க் குறை‌க்கலா‌ம்.

    மேலு‌ம், நமது முத‌ல் செலவே சே‌மி‌ப்பாக இரு‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். சே‌மி‌ப்பு எ‌ன்றா‌ல் ஏதோ பெ‌ரிய‌த் தொகையை‌த் தா‌ன் வ‌ங்‌கி‌யி‌ல் செலு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ல்லை. தபா‌ல் அலுவலக‌த்‌தி‌ல் 100 ரூபா‌ய் செலு‌த்‌தி ஒரு சே‌மி‌ப்பு‌க் கண‌க்கை‌த் துவ‌ங்‌கி‌னா‌ல் கூட போது‌ம். கை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் தொகை‌யி‌ல் அ‌தி‌ல் செலு‌த்‌தி வாரு‌ங்க‌ள். அவசர‌த்‌தி‌ற்கு‌ம் உதவு‌ம், உ‌ங்களு‌க்கு‌ம் ஒரு த‌ன்ன‌ம்‌பி‌க்கை ‌பிற‌க்கு‌ம்.

    இ‌ந்த சே‌‌‌மி‌ப்பு ஆ‌ற்ற‌ல் உ‌ங்களை செலவா‌லி‌யி‌ல் இரு‌ந்து செ‌ல்வ‌ந்தராக‌க் கூட மா‌ற்றலா‌ம்.

    வீ‌ட்டி‌ற்கு‌த் தேவையான ஒரு பொருளை வா‌ங்‌க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் எ‌‌ண்‌ணினா‌ல், அத‌ற்காக ஒரு உ‌ண்‌டிய‌ல் வா‌ங்‌கி வ‌ந்து அ‌தி‌ல் கை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌சிறு தொகையை அ‌தி‌ல் போ‌ட்டு வரலா‌ம். அது க‌ணிசமான தொகையாக சே‌ர்‌ந்தது‌ம், ‌‌நீ‌ங்க‌ள் ‌விரு‌ம்‌பிய‌ப் பொருளை வா‌ங்‌கலா‌ம். இது 100 ரூபா‌ய் பொரு‌ளி‌ல் இரு‌ந்து 1000 ரூபா‌ய் பொரு‌ள் வரை‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

    சில ‌சி‌‌ன்ன ‌சி‌ன்ன ‌விஷய‌ங்களை‌ச் செ‌ய்து பா‌ர்‌க்கலா‌ம்...

    தேவைய‌ற்ற‌ப் பொரு‌ட்க‌ள் வா‌ங்‌குவதை‌த் த‌‌வி‌ர்‌ப்பது, தேவைய‌ற்ற இட‌ங்களு‌க்கு‌ச் செ‌ல்வது போ‌ன்ற ‌விஷய‌ங்களையு‌ம் மூ‌ட்டை க‌ட்டி‌விடு‌ங்க‌ள்.

    மாத‌த்‌தி‌ல் முத‌ல் 15 நா‌ளி‌ல் ஒரு நாளு‌ம், அடு‌த்த 15 நா‌ளி‌ல் ஒரு நாளு‌ம், நா‌ள் முழுவது‌ம் எ‌ந்த பொரு‌ளு‌ம் வா‌ங்காம‌ல், செலவ‌‌ழி‌க்காம‌ல் இரு‌ந்து பாரு‌ங்க‌ள்.

    வீ‌ட்டி‌ற்கு‌த் தேவையான‌‌ப் பொரு‌ட்களை ப‌ட்டிய‌லி‌ட்டு வா‌ங்‌கி வாரு‌ங்க‌ள். ப‌ட்டிய‌லி‌ல் இ‌ல்லாத‌ப் பொரு‌ட்களை வா‌‌ங்குவதையு‌ம், ப‌ட்டிய‌லி‌ல் இரு‌க்கு‌ம் பொருளை ‌வி‌ட்டு‌விடுவதையு‌ம் த‌வி‌ர்‌க்கவு‌ம்.

    நீ‌ங்க‌ள் செ‌ல்லு‌ம் இட‌த்‌தி‌ற்கு‌த் தேவையான தொகையை‌த் த‌விர அ‌திகமாக பண‌ம் எடு‌த்து‌ச் செ‌ல்வதை‌த் த‌விரு‌ங்க‌ள்.

    மாத‌க் கடை‌சி‌‌யி‌ல் செல‌வ‌ழி‌க்க ‌சிறு தொகையை எ‌ப்போது‌ம் த‌னியாக எடு‌த்து வை‌த்து ‌விடு‌ங்‌‌க‌ள். இ‌ப்படி செ‌ய்து வ‌ந்தா‌ல் கை‌யி‌ல் காசே இரு‌ப்ப‌தி‌ல்லை எ‌ன்று பலரு‌ம் புல‌ம்புவது போல ‌நீ‌ங்களு‌ம் புல‌ம்ப தேவை‌யி‌ல்லை. 

    நன்றி வெப்துனியா

    மேலும் பல்தகவல்களுக்கு 


    தமிழ்த்தோட்டம் 


    தமிழ்த்தோட்டம் கருத்துக்களம்   -சுதந்திரமாக உங்களின் கருத்துக்களை வெளியிடலாம்

    Monday, September 06, 2010

    விடுதலை புலிகள் இயக்கம் ஒரு அரசியல் அமைப்பு - நியுசிலாந்து சுப்ரீம் கோர்டு பரபரப்பு தீர்ப்பு

    - நன்றி தினத்தந்தி

    Saturday, May 22, 2010

    முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

    ம‌னிதனு‌க்கு ந‌ம்‌பி‌க்கை‌க்கு அடு‌த்த படியாக முதுகெலு‌ம்பு ‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறது. ஒருவ‌ன் ‌நி‌மி‌ர்‌ந்து நட‌ப்பத‌ற்கே முதுகெலு‌ம்புதா‌ன் காரணமாக அமை‌கிறது.

    ம‌னித‌னி‌ன் ‌பி‌ன்புற இடு‌ப்‌பி‌ல் துவ‌ங்‌கி மே‌ற்புற‌ம் முகுள‌ம் வரையான த‌ண்டுவட‌ம் ஆ‌ற்று‌ம் ப‌ணி அ‌ரியது.

    மூளை‌யி‌ன் செயலை‌ப் போலவே இத‌ன் செய‌ல்களு‌ம் மு‌க்‌கியமானவை. இத‌ன் மே‌ல் முனையான முகுள‌ம் உண‌ர்வுகளை கட‌த்துவ‌திலு‌ம் நர‌ம்பு ம‌ண்டல செய‌ல்பா‌ட்டிலு‌ம் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கிறது.

    த‌ண்டுவட‌ம் இ‌ல்லா‌வி‌‌ட்டா‌ல் ம‌னித‌ன் துவ‌ண்டு போ‌ய்‌த்தா‌ன் இரு‌ப்பா‌ன். த‌ண்டுவட‌ம் செய‌ல் இழ‌ந்தாலு‌ம் பெரு‌ம்பாலான ப‌ணிக‌ள் பா‌‌தி‌க்கு‌ம்.

    மூளை‌யி‌ன் க‌ட்டளைகளை‌ப் பெ‌ற்று உண‌ர்வுகளை‌க் கட‌த்து‌ம் ப‌ணியை முதுகெலு‌ம்புக‌ள்‌ ‌மிக‌ச் ‌சிற‌ப்பாக செ‌ய்‌கி‌ன்றன.

    முதுகெலு‌ம்‌பி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டா‌ல் கைகா‌ல்களை அசை‌க்க முடியாத ஜட ‌நிலையை ம‌னித‌ன் அடையு‌ம் வா‌ய்‌ப்பு‌ம் உ‌ள்ளது.

    நன்றி webdunia

    மேலும் பல தகவலுக்கு இங்கு சுட்டவும்

    Tuesday, May 11, 2010

    டீன் ஏஜ் அழகு குறிப்புகள்

    திருமணமாகி, குழந்தை பெற்று, இளமை காணாமல் போக ஆரம்பிக்கிற காலக் கட்டத்தில் பியூட்டி பார்லருக்குப் பெண்கள் படையெடுத்த காலம் மலையேறி விட்டது. இன்றைய பள்ளி மற்றும் கல்லு}ரி வாசல்களில் நின்று பார்த்தால் டீன் ஏஜ் பெண்களின் அழகு அட்டகாசம் பிரமிக்க வைக்கிறது. விதம் விதமான ஹேர் கலரிங், புதுசு, புதுசாய் ஹேர் ஸ்டைல்கள், ஃபேஸ் பெயிண்டிங், டாட்டூ என நாகரிகத்தின் உச்சத்துக்குப் போய் கொண்டிருக்கிறார்கள் இன்றைய டீன் ஏஜ் பெண்கள்.

    டீன் ஏஜில் அழகுப்படுத்திக் கொள்வது என்பது ஆரோக்கியமானதா? ஆபத்தானதா? பிரபல அழகுக் கலை நிபுணர் வசுந்தரா என்ன சொல்கிறார்?

    டீன் ஏஜில் அழகு சிகிச்சை என்பதை ஒட்டு மொத்தமாகத் தவறு என்று சொல்லிவிட முடியாது. இந்த வயதில் அவர்களுக்குத் தெரிய வேண்டிய அடிப்படை விஷயம் சுத்தம்.

    அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என நினைக்கிற பலரும் இந்த வயதில் ஆரோக்கியமாகவோ, சுத்தமாகவோ இருக்க வேண்டும் என நினைப்பதில்லை.

    டீன் ஏஜில் சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் வேலை வேகமாக, அதிகமாக இருக்கும். அதனால் முகத்தில் பருக்கள், சருமத்தில் எண்ணெய் வழிதல், வியர்வை போன்றவை இருக்கும். டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் என்ன தெரியுமா?

    தினமும் மாலையில் வீடு திரும்பியதும் கிளென்சிங் மில்க் கொண்டு முகத்தைத் துடைத்து சுத்தப் படுத்த வேண்டும்.

    தினம் இரண்டு முறைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்.

    அடிக்கடி முகம் கழுவ வேண்டும்.

    அக்குள் பகுதியில், அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சி ஆரம்பிக்கிற காலக்கட்டம் இது என்பதால் அந்த விஷயத்திலும் கூடுதல் சுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ரேசர், ரோமம் நீக்கும் கிரீம் போன்றவற்றை உபயோகித்து ரோமங்களை அகற்றாமல், வாக்சிங் செய்து கொள்ளலாம். இதனால் சருமம் கருத்துப் போகாது. வலியும் குறைவு.

    வியர்வை நாற்றம் இந்த வயதில் தவிர்க்க முடியாதது. உடைகள் கறைபடியும். இதற்கு நல்ல தரமான டியோடரண்ட் உபயோகிக்கலாம். இது உடல் நாற்றத்தைப் போக்கி, வியர்வையையும் கட்டுப்படுத்தும்.

    டீன் ஏஜில் பெரும்பாலானவர்களைக் கவலைக்குள்ளாக்கும் விஷயம் பரு. ஹார்மோன் மாற்றங்கள், அதிக சீபம் சுரப்பது போன்றவற்றின் விளைவால் பரு தோன்றும். வாரம் இரண்டு முறை இவர்கள் முகத்துக்கான பேக் உபயோகிக்கலாம். டீ ட்ரீ ஆயில், கற்பூரம், கிராம்பு மாதிரி ஏதேனும் ஒன்று கலந்த பேக் ஆன்டிசெப்டிக்காகவும் வேலை செய்யும். அதிக எண்ணெய் பசையையும் நீக்கும். பருக்களையும் கட்டுப்படுத்தும். பருக்கள் இருப்பவர்கள் ஆண்களோ, பெண்களோ அவற்றை நகங்களால் கிள்ளக் கூடாது.

    குளிப்பதற்கு இவர்கள் அதிகக் கொழுப்பில்லாத சோப் அல்லது ஆயில் ஃப்ரீ சோப் மற்றும் ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். இது அவர்களது சருமத் துவாரங்களை அடைக்காமலிருக்கும்.

    எண்ணெய் குளியல் என்பதை இந்தக் காலத்து டீன் ஏஜில் இருக்கும் அனேகம் பேர் அறிந்தே இருக்க மாட்டார்கள். இவர்களுக்காக வந்திருக்கிறது shower cream. எண்ணெய் கலந்த இந்த கிரீமை அப்படியே தலையில் தடவிக் கொண்டு, சிறிது நேரம் ஊறித் தேய்த்துக் குளிக்க வேண்டியதுதான். எண்ணெய் குளியல் எடுத்த எஃபெக்ட்டும் இருக்கும். ஷாம்பூ போட்டு குளித்த மாதிரிக் கூந்தலும் பளபளக்கும்.

    பொடுகுப் பிரச்சினையும் இந்தப் பருவத்தில் பெரிதும் அவதி தரும். வாரம் மூன்று முறை ஆன்டி டான்டிராஃப் ஷாம்பூ உபயோகித்துத் தலைக்குக் குளிக்கலாம். இது தவிர மாதம் ஒன்றிரண்டு முறை தலைக்கு ஹாட் ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். ஆனால் தலைக்குக் குளித்த பிறகு கட்டாயம் கண்டிஷனர் உபயோகிக்க வேண்டியது முக்கியம்.

    மாதவிலக்கு நாட்களில் டீன் ஏஜால் இருக்கும் பெண்கள் கூடுதல் சுத்தம் கடைப்பிடிக்கலாம். இருமுறை குளிப்பது, அடிக்கடி நாப்கின்களை மாற்றுவது தவிர, இந்த நாட்களில் உபயோகிக்கவென �ஃபெமினைன் வாஷ் என்று கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம். இது துர்நாற்றத்தை நீக்கி, தொற்றுக் கிருமிகள் தாக்காமலும் காக்கும்.

    இந்த வயதில் அதிகப் படியான மேக்கப்புக்குப் பழகுவது தேவையில்லாதது. டீன் ஏஜின் கடைசிக் கட்டத்தில் இருப்பவர்கள் சிம்பிளான மேக்கப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். ஆயில் ஃப்ரீ ஃபவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர், லைட் ஷேடுகளில் லிப்ஸ்டிக், கண் மை போன்றவற்றை உபயோகிக்கலாம். முகத்தில் எண்ணெய் வழியாமல், பளிச்செனக் காட்சியளிக்க இதுவே போதும்.
     

    Wednesday, March 10, 2010

    அ‌திக ‌சிறு‌நீ‌ர் வ‌ெ‌ளியாவதை‌த் தடு‌க்க

    சிலரு‌‌க்கஅ‌வ்வ‌ப்போது ‌சிறு‌நீ‌ரவெ‌ளியா‌கி‌ககொ‌ண்டஇரு‌‌க்கு‌ம். இதனை‌தத‌வி‌ர்‌க்வை‌த்‌திய‌மதா‌ன் ‌சிற‌ந்தது.

    தாழ‌ம்பூவது‌ண்டது‌ண்டாவெ‌ட்டி ‌நீ‌ரி‌லஇ‌ட்டகா‌ய்‌ச்வே‌ண்டு‌ம். ‌நீ‌ரந‌ன்ககொ‌தி‌த்தபூ‌வித‌ழ்க‌ளவத‌ங்‌கிய ‌பி‌னவடிக‌ட்டி, தேவையாச‌ர்‌க்கரகூ‌ட்டி பாகுபதமா‌யகா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌ககொ‌ள்ளவு‌ம்.

    இதுவதாழ‌ம்பமண‌ப்பாகு. இதனஒரு ‌ஸ்பூ‌னஅளவு ‌நீ‌ரி‌லகல‌ந்தஇருவேளகுடி‌த்தஉட‌லஉ‌ஷ‌்ண‌த்தை‌தத‌ணி‌க்கு‌ம்.

    இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌பி‌த்நோ‌ய்களு‌ம் ‌தீரு‌ம். அ‌திகள‌வி‌ல் ‌சிறு‌நீ‌ரவெ‌ளியாவதை‌ததடு‌க்கு‌ம்.

    தாழ‌ம்பூவை உல‌ர்‌த்‌தி சூரணமா‌க்‌‌‌கி, ‌ச‌ர்‌க்கரை கல‌ந்து அ‌ல்லது அ‌ப்படியே அரை‌த்து பா‌லி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர கப‌ம், காச‌ம், ‌நீரே‌ற்ற‌ம், தலைநோ‌யபோ‌‌ன்றவை ‌தீரு‌ம்.

    thanks webdunia

    fore more please click here

    Monday, February 01, 2010

    மெகா பரிசு போட்டியின் முடிவு

    தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டியின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது, முடிவை பார்வையிட இங்கு சுட்டவும்.

    Saturday, January 30, 2010

    தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டியின் முடிவு

    தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டியின் முடிவு 01-02-2010 (திங்கள் கிழமை) வெளியிடப்படுகிறது...




    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்த்தோட்டத்தின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    Tuesday, January 05, 2010

    தமிழ் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும், மெகா பரிசு போட்டி

    தமிழ் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும், மெகா பரிசு போட்டி

    தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டி

    தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக மெகா பரிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, கவிதை மற்றும் கதைக்கு முடிவு எழுதுதல் ஆகியவற்றிர்கு முதல் இரண்டு பரிசுகளும், பரிசு பெறும் படைப்புகள் இலவசமாக தமிழ்த்தோட்டத்தில் வெளிவரும்.

    கடைசி நாள் 15 - 01 - 2009.


    படைப்புகளை எழுதி பரிசுகளை அள்ளி செல்லுங்கள் மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்