தமிழ்த் தாத்தா என்று நம்மால் செல்லமாக அழைக்கப்படுபவர் உ.வே. சாமிநாத ஐயர். இவரை ஏன் இப்படி அழைக்கிறோம்.
செல்லரித்து, சிதைந்து, அழியும் தருவாயில் இருந்த ஏராளமான பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை சரிபார்த்து, ஒழுங்குபடுத்தி, அச்சிட்டு அழியாத கருவூலங்களாக தமிழ் மொழிக்கு அளித்த பெரியவர் தான் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்.
அவருடைய உழைப்பும், முயற்சியும் இல்லாமல் இருந்தால், பழந்தமிழ் இலக்கியங்களை நாம் அடியோடு இழந்திருப்போம்.
தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற ஒரு சிறு கிராமத்தில் தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயர் அவர்கள் 1885-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 19-ம் நாள் பிறந்தார்.
இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வெங்கட் ராமன். அது பாட்டனார் பெயராக இருப்பதால், அப்பெயரிட்டு அழைப்பது மரியதைகுறைவு என்று கருதி அன்னையார் சாமிநாதன் என்ற செல்ல பெயரால் அழைப்பது வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்துவிட்டது.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் ஐயர் அவர்கள் முறையாகத் தமிழ் கற்றார்.
கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த போது தான் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
கடுமையான உழைப்புக்கும் சிரமத்திற்கும் பிறகு ஐயர் அவர்கள் 1892-ம் ஆண்டு சிலப்பதிகாரத்தைச் சரிபார்த்து பதிப்பித்தார். தொடர்ந்து மணிமேகலை, புறநானுறு ஆகிய நூல்களை பதிப்பித்தார்.
இதே போன்று 1902 - 1904-ம் ஆண்டுகளில் ஐயர் அவர்களால் ஐங்குறுநூறும் பாதிற்றுப்பத்தும் பதிப்பிக்ப்பெற்றன சூலியன் வின்சோன், ஜியு. போப் போன்றவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
"தமிழ் தாத்தா" என்த் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்ற டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர் அவர்கல்
ஐயர் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
ஐயர் அவர்களின் அற்புதமான தமிழ் தொண்டினைத் தமிழ் பயின்ற வெளிநாட்டு அறிஞர்களான 1942-ம் ஆண்டு நிறைவு எய்தினார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை இன்று பேசுவதே கேவலம் என்று நினைக்கின்றனர் இந்த காலத்துப் பிள்ளைகள். இந்த கொடுமையை என்னவென்று சொல்லுவது? ................
Saturday, April 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
hi dear friend its a nice social work for swami natha iyer.
தமிழ் தாத்தா அவர்கள்
ஒரு நாள் இரவு சாப்பிட்டபின் வீட்டு மொட்டை மாடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று இரவின் நிசப்தத்தைக் கலைத்து ஒரு உருக்கமான பாடல் வரி கேட்கிறது. 'ஊரைச் சுடுமோ........உலகந்தனைச் சுடுமோ...... ஆரைச் சுடுமோ?......அறியேனே.......' என்று அந்தக் குரல் உருக்குகிறது. உ.வே.சா நிமிர்ந்து உட்காருகிறார். மீண்டும் அதே உருக்கமான பாடல் வரி அவரை சிலிர்ப்படையச் செய்கிறது. எழுந்து நடந்து போய் தெருவை எட்டிப் பார்க்கிறார். பாலெனப் பொழியும் நிலவொளியில் தூரத்தில் ஒரு ராப்பிச்சைக்காரன் பாடிக் கொண்டே போவது தெரிகிறது. 'மூங்கிலிலைமேலே தூங்கும்.....' என்று ஏற்றப் பாட்டில் கேட்டு மூங்கில் இலை மேலே தூங்குவது எதுவாக இருக்கக்கூடும் என்று புரியாமல் தவித்த கம்பரைப் போல, மகாவித்துவானான உ.வே.சாவுக்கு 'எது ஊரைச் சுட வல்லது? உலகத்தையே சுடப் போவது எது?' என்ற குழப்பம் உண்டாகிறது. அடுத்த வரிக்காகக் காத்திருக்கிறார். ஆனால் அந்தப் பொல்லாத பிச்சைக்காரன் அந்த ஒரு வரியையே திரும்பத் திரும்பப் பாடியபடி செல்கிறான். தமிழ்த் தாத்தாவுக்குப் பொறுக்க வில்லை. பரபரப்புடன் படியிறங்கி அவனைத் தொடர்ந்து போய் பாட்டு முழுவதையும்கேட்டுவிடத் துடிக்கிறார்.
ஆனால் எத்தனை தெரு சுற்றி வந்தாலும் அவன் அந்த ஒரு வரிக்கு மேல் பாடுவதாய் இல்லை. பொறுமை இழந்தவராய் அவனை நெருங்கி, " அப்பனே! அந்தப் பாட்டைத் தொடர்ந்து பாடேன்" என்கிறார். "பாட்டா? பசி உயிர் போகிறது - தொடர்ந்து பாட சக்தி எங்கே இருக்கிறது?" என்று அலுத்துக் கொள்கிறான் அவன். "அவ்வளவுதானே? என் கூட வா. வயிறார சாப்பாடு போடுகிறேன். சாப்பிட்டு விட்டுப் பாடு!" என்று அழைக்கிறார். அவன் பரமானந்தத்துடன் அவருடன் போகிறான். திண்ணையில் அமர வைத்து உணவளிக்கிறார். அவன் சாப்பிட்டுத் திருப்தியாய் ஏப்பம் விட்டபின், "இப்போது முழுப் பாட்டையும் பாடு" என்று ஏதோ புதையலைப் பார்க்கப் போகிற ஆர்வத்தோடு கேட்கிறார். அவன் பாடுகிறான்:
'ஊரைச் சுடுமோ? உலகந்தனைச் சுடுமோ?
ஆரைச் சுடுமோ அறியேனே! - நேரே
பொருப்பு வட்டமான நகில் பூங்கொடியீர்! இந்த
நெருப்பு வட்டமான நிலா.'
'ஆகா! ஆகா!' என்று உருகிப் போகிறார் - ஊர் ஊராய் நடையாய் நடந்து பழந்தமிழ்ச் செல்வங்களை தேடி நமக்களித்த வள்ளல்!
நல்ல பதிவு. நன்றி.
Good Blog!!
Post a Comment