நம் நாட்டில் வளரும் பல தாவரங்கள் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. அதில் இலைகள் மட்டுமல்லாமல் மலர்களையும் பழங்களையும் பயன்படுத்திப் பல மருந்துகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ரோஜாப் பூ, உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டவல்லது. இதமான மலமிளக்கியாகவும் உள்ளது. கண்களுக்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் பன்னீர் நல்லது.
ஜீரண சக்தியை தூண்ட, உடலுக்கு வலிமை அளிக்க, புத்தி கூர்மையை கூட்ட, உடலில் துர்வாசனையை போக்கவும் ரோஜா பயன்படுகிறது.
யுனானி மருத்தவத்தில் குல்கந்து என்று சொல்லப்படும் மருந்து ரோஜா, பேரீச்சம் பழம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
மலச்சிக்கலுக்குக் குல்கந்து ஒரு சிறந்த மருந்து. குடல் சம்பந்தமான வியாதிகளை இது குணப்படுத்துகிறது.
மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
Monday, December 07, 2009
Friday, November 27, 2009
நீர்க்கட்டு குணமாக முருங்கை வைத்தியம்
முருங்கை கீரையை சாப்பிடுவதால் இரும்பு சத்து கிடைக்கும். கீரை வகைகளில் முருங்கை கீரை ஜீரணமாவது கடினம். எனவே இரவு நேரத்தில் முருங்கைக் கீரையை சாப்பிடக் கூடாது.
முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை தூக்கி எறியாமல் அதனை நசுக்கிப் போட்டு மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை,கால் அசதி நீங்கும்.
குழந்தைகளின் வயிற்று உப்புசம் தணிய முருங்கை கீரைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ள கொடுக்கவும்.
முருங்கைக் கீரையுடன் சிறிது உப்பு கூட்டி நன்கு வறுக்க வேண்டும். கீரை சுருண்டு உப்புடன் சேர்ந்து கருகும். கீரை நெருப்பு பிடிக்கும் வரை வறுத்து, பின் இறக்கி ஆறியதும் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியேப்பம் வரும்போது அதில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடியுங்கள். அது சரியாகிவிடும்.
முருங்கை கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாக பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரப் பெருக்கும்.
thanks to webdunia
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரிக்கு இங்கு சுட்டவும்
முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை தூக்கி எறியாமல் அதனை நசுக்கிப் போட்டு மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை,கால் அசதி நீங்கும்.
குழந்தைகளின் வயிற்று உப்புசம் தணிய முருங்கை கீரைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ள கொடுக்கவும்.
முருங்கைக் கீரையுடன் சிறிது உப்பு கூட்டி நன்கு வறுக்க வேண்டும். கீரை சுருண்டு உப்புடன் சேர்ந்து கருகும். கீரை நெருப்பு பிடிக்கும் வரை வறுத்து, பின் இறக்கி ஆறியதும் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியேப்பம் வரும்போது அதில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடியுங்கள். அது சரியாகிவிடும்.
முருங்கை கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாக பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரப் பெருக்கும்.
thanks to webdunia
Monday, November 23, 2009
நீங்கள் ஒரு தமிழ் படைப்பாளரா - அரிய வாய்ப்பு
நீங்கள் ஒரு தமிழ் படைப்பாளரா
உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு
தமிழ் படைப்பாளர்களின் படைப்புகளை இலவசமாக வெளியிடுகிறது
உங்கள் படைப்புகள் தமிழ்த்தோட்டத்தில் இலவசமாக வெளிவரவேண்டுமெனில்
உங்கள் தமிழ் படைப்புகளை
எமக்குஎழுதி அனுப்புங்கள்...
Saturday, November 21, 2009
கருத்தரிக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை
புதுமணத் தம்பதிகளும் சரி, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளவர்களும் சரி சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தாயாகும் முன்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களாவன :
1. கருத்தரிக்க ஏற்ற வயதை அடைந்துவிட்டோமா? அல்லது அதைக் கடந்து விட்டோமா?
2. தாயாகும் பெண்ணிற்கு அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?
3. உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் ரத்தப் பொருத்தம் உள்ளதா?
4. கருத்தடைக்காக ஏதேனும் மருந்து பயன்படுத்தியிருந்தால் அதனை நிறுத்த வேண்டிய காலம் எது?
5. கருத்தடை மருந்தை நிறுத்தியப் பிறகு எத்தனை மாதங்கள் கழித்து கருத்தரிக்கலாம்?
6. தாயாகும் பெண்ணிற்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம்?
7. உடல் நலக் குறைப்பாட்டிற்காக ஆண்டுக்கணக்கில் ஏதேனும் மருந்து உட்கொள்கிறீர்களா? அதனை கருவுறுதலின் போது தொடரலாமா அல்லது நிறுத்த வேண்டியது அவசியமா?
8. உங்கள் பணியிடம், கருத்தரிப்புக்கு ஏதேனும் பங்கம் விளைவிக்குமா?
9. பணியிடங்களில் விளையும் ஆபத்துகள் என்ன?
10. பரம்பரையாக வரும் நோய் பாதிப்புகள் என்ன? அதனை தடுக்க வழி உண்டா?
11. எப்போது கருத்தரிக்க இயலும்?
12. கருத்தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?
13. கருவில் இருக்கும் குழந்தையை ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாமா?
14. பிறவிக் குறைபாடற்ற, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வது எப்படி?
15. சுகப் பிரசவம் ஆவதற்கான வழிகள் என்ன?
இதுபோன்ற கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்து கொண்டு பின்னர் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks webdunia
தாயாகும் முன்பு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்களாவன :
1. கருத்தரிக்க ஏற்ற வயதை அடைந்துவிட்டோமா? அல்லது அதைக் கடந்து விட்டோமா?
2. தாயாகும் பெண்ணிற்கு அம்மைத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா?
3. உங்கள் கணவருக்கும், உங்களுக்கும் ரத்தப் பொருத்தம் உள்ளதா?
4. கருத்தடைக்காக ஏதேனும் மருந்து பயன்படுத்தியிருந்தால் அதனை நிறுத்த வேண்டிய காலம் எது?
5. கருத்தடை மருந்தை நிறுத்தியப் பிறகு எத்தனை மாதங்கள் கழித்து கருத்தரிக்கலாம்?
6. தாயாகும் பெண்ணிற்கு புகைப்பழக்கம், மதுப்பழக்கம்?
7. உடல் நலக் குறைப்பாட்டிற்காக ஆண்டுக்கணக்கில் ஏதேனும் மருந்து உட்கொள்கிறீர்களா? அதனை கருவுறுதலின் போது தொடரலாமா அல்லது நிறுத்த வேண்டியது அவசியமா?
8. உங்கள் பணியிடம், கருத்தரிப்புக்கு ஏதேனும் பங்கம் விளைவிக்குமா?
9. பணியிடங்களில் விளையும் ஆபத்துகள் என்ன?
10. பரம்பரையாக வரும் நோய் பாதிப்புகள் என்ன? அதனை தடுக்க வழி உண்டா?
11. எப்போது கருத்தரிக்க இயலும்?
12. கருத்தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?
13. கருவில் இருக்கும் குழந்தையை ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாமா?
14. பிறவிக் குறைபாடற்ற, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்வது எப்படி?
15. சுகப் பிரசவம் ஆவதற்கான வழிகள் என்ன?
இதுபோன்ற கேள்விகளுக்கு பதில்களைத் தெரிந்து கொண்டு பின்னர் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks webdunia
Friday, November 20, 2009
ஆவாரை - பித்தம், வாதத்திற்கு மருந்தாகும்
ஆவாரை பித்தத்திற்கும், வாதத்திற்கும் அருமருந்தாகும்.
ஆவாரை முழுச்செடியையும் நிழலில் உலர்த்தி சூரணமாக செய்து கொள்ளவும். இதனை 1-2 கிராம் அளவு மோரில் கலந்து உண்ண பித்தம் தணியும்.
பாலில் கலந்து உண்ண வாதம் தீரும். வெற்றிலைச் சாற்றில் உண்ண ஆஸ்துமா குணமாகும். அரிசி கழுவிய நீரில் உண்ண நீரிழிவு தீரும்.
நெய்யில் கலந்து உண்ண குஷ்டம் தீரும். கஞ்சியுடன் சேர்த்து உண்ண மயக்கம் தீரும். வெந்நீருடன் கலந்து உண்ண கழுத்துவலி தீரும்.
ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து பொடி செய்து தினமும் தேய்த்துக் குளித்துவர கடும்புள்ளி முகப்பரு போன்றவை நீங்கி தேகம் மினுமினுக்கும்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia
ஆவாரை முழுச்செடியையும் நிழலில் உலர்த்தி சூரணமாக செய்து கொள்ளவும். இதனை 1-2 கிராம் அளவு மோரில் கலந்து உண்ண பித்தம் தணியும்.
பாலில் கலந்து உண்ண வாதம் தீரும். வெற்றிலைச் சாற்றில் உண்ண ஆஸ்துமா குணமாகும். அரிசி கழுவிய நீரில் உண்ண நீரிழிவு தீரும்.
நெய்யில் கலந்து உண்ண குஷ்டம் தீரும். கஞ்சியுடன் சேர்த்து உண்ண மயக்கம் தீரும். வெந்நீருடன் கலந்து உண்ண கழுத்துவலி தீரும்.
ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து பொடி செய்து தினமும் தேய்த்துக் குளித்துவர கடும்புள்ளி முகப்பரு போன்றவை நீங்கி தேகம் மினுமினுக்கும்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia
Thursday, November 19, 2009
கொழுப்பு அதிகமாகாமல் தடுக்க
அளவுக்கு அதிகமாக எந்த உணவையும் உண்ண வேண்டாம். போதுமான அளவு உணவை மட்டும் உண்ணவும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட சமையல் எண்ணைகளை பயன்படுத்தவும். வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தவும்.
லினோலெனிக் அமிலம் நிறைந்த (பயறுகள், பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள், வெந்தயம், கடுகு) உணவு பயன்படுத்தவும்.
ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றிற்கு பதிலாக மீன் உணவுகளை சாப்பிடவும்.
வறுத்த பொறித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிகமாக சமைத்துச் சாப்பிடவும்.
ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தும் எண்ணெயை மாற்றிக் கொண்டே இருக்கவும். ஒரு முறை பொரித்த எண்ணெயை அன்றைய தினமே பயன்படுத்தி விடவும். எடுத்து வைக்க வேண்டாம்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Thanks to webdunia
ஒன்றுக்கும் மேற்பட்ட சமையல் எண்ணைகளை பயன்படுத்தவும். வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தவும்.
லினோலெனிக் அமிலம் நிறைந்த (பயறுகள், பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள், வெந்தயம், கடுகு) உணவு பயன்படுத்தவும்.
ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றிற்கு பதிலாக மீன் உணவுகளை சாப்பிடவும்.
வறுத்த பொறித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிகமாக சமைத்துச் சாப்பிடவும்.
ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தும் எண்ணெயை மாற்றிக் கொண்டே இருக்கவும். ஒரு முறை பொரித்த எண்ணெயை அன்றைய தினமே பயன்படுத்தி விடவும். எடுத்து வைக்க வேண்டாம்.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Thanks to webdunia
Wednesday, November 18, 2009
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு: 166 பேர் தேர்ச்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை ஆட்சியர், துணை பதிவாளர், மாவட்ட ஊரக மேம்பாட்டு அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி என 82 பதவிகளுக்கு குரூப்-1 தேர்வு நடந்தது.
முதன்மைத் தேர்வு 2009 அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சென்னையில் சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குருப்-1 முதன்மை தேர்வுக்காக 164 மாணவ-மாணவிகளுக்கு இலவச தங்குமிடம், உணவு வசதி அளித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதில், தற்போது 44 மாணவிகளும், 43 மாணவர்களும் ஆக மொத்தம் 87 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குருப்-1 நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வோருக்காக வரும் 21ஆம் தேதி முதல் நேர்முகத்தேர்வு முடியும் வரை தங்குமிடம், உணவு வசதி அளிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகளும், மாதிரி நேர்முகத்தேர்வுகளும் நடத்தப்படும்.
இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ- மாணவிகள் உடனடியாக தங்கள் பெயரை இந்த மையத்தில் வந்து பதிவுசெய்யுமாறு பயிற்சி மையத்தின் தலைவர் சைதை துரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் அடிப்படையிலான பணி ஒதுக்கீடு பட்டியல் நேற்று வெளியானது. இதில் மதிப்பெண் அடிப்படையில் தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் பணி என பல்வேறு பணியிடங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
குரூப்-2 தேர்வில் மொத்தம் 2,449 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் 278 பேரின் முடிவுகள் சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கான பணி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது. மீதமுள்ள 2171 பேரில் யார் யாருக்கு என்ன பணியிடம் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை ஆட்சியர், துணை பதிவாளர், மாவட்ட ஊரக மேம்பாட்டு அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி என 82 பதவிகளுக்கு குரூப்-1 தேர்வு நடந்தது.
முதன்மைத் தேர்வு 2009 அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சென்னையில் சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குருப்-1 முதன்மை தேர்வுக்காக 164 மாணவ-மாணவிகளுக்கு இலவச தங்குமிடம், உணவு வசதி அளித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதில், தற்போது 44 மாணவிகளும், 43 மாணவர்களும் ஆக மொத்தம் 87 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குருப்-1 நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வோருக்காக வரும் 21ஆம் தேதி முதல் நேர்முகத்தேர்வு முடியும் வரை தங்குமிடம், உணவு வசதி அளிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகளும், மாதிரி நேர்முகத்தேர்வுகளும் நடத்தப்படும்.
இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ- மாணவிகள் உடனடியாக தங்கள் பெயரை இந்த மையத்தில் வந்து பதிவுசெய்யுமாறு பயிற்சி மையத்தின் தலைவர் சைதை துரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் அடிப்படையிலான பணி ஒதுக்கீடு பட்டியல் நேற்று வெளியானது. இதில் மதிப்பெண் அடிப்படையில் தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் பணி என பல்வேறு பணியிடங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
குரூப்-2 தேர்வில் மொத்தம் 2,449 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் 278 பேரின் முடிவுகள் சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கான பணி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது. மீதமுள்ள 2171 பேரில் யார் யாருக்கு என்ன பணியிடம் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
thanks to webdunia
Tuesday, November 17, 2009
நெட் பைத்தியமா? சிகிச்சை தேவை!
பலரும் கணினி முன் அமர்ந்தால் உலகமே மறந்து போய்விடுகிறது என்று மகிழ்ச்சியாகக் கூறும் காலம் போய், கணினி முன் அமர்ந்து உலகத்தையே மறந்துவிட்டவர்கள் அதிகரித்து வரும் காலம் இது.
இந்த நெட் பைத்தியங்களால் பணம் சம்பாதிப்பது நெட் சென்டர்கள் மட்டுமல்ல, நெட் பைத்தியங்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்று அமெரிக்காவில் ஒரு மையம் ஆரம்பித்துவிட்டது வியாபாரத்தை.
இணையம் பற்றி வகுப்பு எடுத்து சம்பாதித்தவர்களுக்கு இப்போது வேலை இல்லை. அந்த நிலை மாறி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.
எப்போதும் இணையத்தில் எதையாவது செய்து கொண்டு கணினி முன் சிலையாகக் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடிக்சன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.
இதுபோன்றவர்களுக்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்த சிகிச்சைக்கு பெயர் என்னத் தெரியுமா? ரீ-ஸ்டார்ட் என்பதுதான். கணினியால் ஹேங்க் ஆகிப் போனவர்களுக்கு ரீ-ஸ்டார்ட் என்ற இந்த சிகிச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.
இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மருத்துவர் லாரி கேஷ் கூறுகையில், இணையம் துவங்கியப் பிறகு பல்வேறு பிரச்சினைகளும் துவங்கிவிட்டன. சமூக மாற்றங்களும் ஏற்பட்டுவிட்டன. இதில் இணையத்தை ஒரு வரைமுறையில் வைத்திருப்பவர்கள் மட்டுமே தப்பிக்கின்றனர். அப்படி தப்பிக்க முடியாதவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், வீடியோ/கணினி விளையாட்டுகளில் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடைப் பயிற்சி, கலந்தாய்வு என பல கட்ட சிகிச்சைகள் உண்டு. இதற்கென உள்ள சிகிச்சை நிபுணர்கள், பாதிக்கப்பட்டவர்களைத் தனித்தனியாக கவனிக்கிறார்கள்.
ஆனால் நெட் பைத்தியம் பிடித்தவர்களுக்கு முழுப் பைத்தியம் ஆகிவிடும், இதற்கான கட்டணத்தைக் கேட்டால். ஆம்.. ஒன்றரை மாதத்திற்கு அதாவது 45 நாட்களுக்கு ரூ.6.75 லட்சமாம்.
அம்மாடியோவ்...
இந்த கட்டணத்தைக் கேட்ட பிறகு தலை லேசாக சுற்றும். எனவே நீங்களாகவே நெட்டில் இருந்து ஓரளவிற்கு விலகிக் கொள்ளலாம் அல்லவா? அதற்காக எங்கள் இணைய தளத்தைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டாம். அதைப் பார்த்தால்தானே இப்படியெல்லாம் பிரச்சினை இருக்கிறது என்று உங்களுக்குத் தெரிய வரும். என்ன நான் சொல்வது?
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia
இந்த நெட் பைத்தியங்களால் பணம் சம்பாதிப்பது நெட் சென்டர்கள் மட்டுமல்ல, நெட் பைத்தியங்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்று அமெரிக்காவில் ஒரு மையம் ஆரம்பித்துவிட்டது வியாபாரத்தை.
இணையம் பற்றி வகுப்பு எடுத்து சம்பாதித்தவர்களுக்கு இப்போது வேலை இல்லை. அந்த நிலை மாறி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.
எப்போதும் இணையத்தில் எதையாவது செய்து கொண்டு கணினி முன் சிலையாகக் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடிக்சன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.
இதுபோன்றவர்களுக்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இந்த சிகிச்சைக்கு பெயர் என்னத் தெரியுமா? ரீ-ஸ்டார்ட் என்பதுதான். கணினியால் ஹேங்க் ஆகிப் போனவர்களுக்கு ரீ-ஸ்டார்ட் என்ற இந்த சிகிச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.
இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மருத்துவர் லாரி கேஷ் கூறுகையில், இணையம் துவங்கியப் பிறகு பல்வேறு பிரச்சினைகளும் துவங்கிவிட்டன. சமூக மாற்றங்களும் ஏற்பட்டுவிட்டன. இதில் இணையத்தை ஒரு வரைமுறையில் வைத்திருப்பவர்கள் மட்டுமே தப்பிக்கின்றனர். அப்படி தப்பிக்க முடியாதவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
ஆனால் நெட் பைத்தியம் பிடித்தவர்களுக்கு முழுப் பைத்தியம் ஆகிவிடும், இதற்கான கட்டணத்தைக் கேட்டால். ஆம்.. ஒன்றரை மாதத்திற்கு அதாவது 45 நாட்களுக்கு ரூ.6.75 லட்சமாம்.
அம்மாடியோவ்...
இந்த கட்டணத்தைக் கேட்ட பிறகு தலை லேசாக சுற்றும். எனவே நீங்களாகவே நெட்டில் இருந்து ஓரளவிற்கு விலகிக் கொள்ளலாம் அல்லவா? அதற்காக எங்கள் இணைய தளத்தைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டாம். அதைப் பார்த்தால்தானே இப்படியெல்லாம் பிரச்சினை இருக்கிறது என்று உங்களுக்குத் தெரிய வரும். என்ன நான் சொல்வது?
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
thanks to webdunia
Monday, November 16, 2009
சிறுநீரை அடக்கக் கூடாது
சிறுநீரை அடக்கக் கூடாது என்று பலரும் கூறுவார்கள். ஆனால் ஏன் என்று கூறியிருக்க மாட்டார்கள்.
அதாவது, சிறுநீரை அடக்கினால் சிறுநீர்ப் பையில் தேங்கும் சிறு நீர், சிறுநீர்ப் பையை விரிவடையச் செய்யும்.
ஆரம்ப காலங்களில் இந்த விரிவாக்கத்தால் அடிவயிற்றில் வலி ஏற்படும். சிறுநீர் வெளியேறும் உணர்வும், உந்துதலும் ஏற்பட்டு சிறுகச் சிறுக சிறுநீர் வெளியேறும்.
ஆனால் நாளடைவில் இந்த வலி ஏற்படுவது மறைந்து சிறுநீர்ப் பைதனக்குரிய செயல் தன்மையை மெல்ல மெல்ல இழந்து விடும்.
இப்படி சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக உள்ளது.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Thanks to Webdunia..
அதாவது, சிறுநீரை அடக்கினால் சிறுநீர்ப் பையில் தேங்கும் சிறு நீர், சிறுநீர்ப் பையை விரிவடையச் செய்யும்.
ஆரம்ப காலங்களில் இந்த விரிவாக்கத்தால் அடிவயிற்றில் வலி ஏற்படும். சிறுநீர் வெளியேறும் உணர்வும், உந்துதலும் ஏற்பட்டு சிறுகச் சிறுக சிறுநீர் வெளியேறும்.
ஆனால் நாளடைவில் இந்த வலி ஏற்படுவது மறைந்து சிறுநீர்ப் பைதனக்குரிய செயல் தன்மையை மெல்ல மெல்ல இழந்து விடும்.
இப்படி சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக உள்ளது.
படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும்
Thanks to Webdunia..
Saturday, November 14, 2009
சளி பிடித்தவர்கள் செய்யக் கூடாதவை
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், சளிபிடித்தவர்கள் ஆகியோர், தக்காளி, பூசணிக்காய், ஐஸ்கிரீம், முள்ளங்கி, நூல்கோல் ஆகியவற்றை உண்ணக் கூடாது. தலைக்கு அரப்பு, சீயக்காய் போட்டு குளிக்கக் கூடாது.
மழையில் நனைவதைத் தவிர்க்க வேண்டும். குடிநீரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும்.
நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளி சாப்பிட்டு வர செரிக்கும் திறன் அதிகரிக்கும்.
தினசரி வாழைப்பழம் சாப்பிட, குடல்புண் மற்றும் சருமநோயை தடுக்கலாம்.
அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் குடித்து வர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர, இரத்தம் சுத்தமாகும்.
மேலும் பல சுவையான தகவல்களுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
மழையில் நனைவதைத் தவிர்க்க வேண்டும். குடிநீரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும்.
நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளி சாப்பிட்டு வர செரிக்கும் திறன் அதிகரிக்கும்.
தினசரி வாழைப்பழம் சாப்பிட, குடல்புண் மற்றும் சருமநோயை தடுக்கலாம்.
அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் குடித்து வர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர, இரத்தம் சுத்தமாகும்.
மேலும் பல சுவையான தகவல்களுக்கு இங்கு சுட்டவும்
thanks to webdunia
Wednesday, November 11, 2009
பெண்களின் கவனத்திற்கு
பெரும்பாலும் நோய்த் தாக்குதலுக்கு ஆளாவதிலும், தங்களது உடலை ஆரோக்கியமாக பராமரிக்காமல் இருப்பதிலும் பெண்களுக்குத்தான் முதலிடம்.
குழந்தை, குடும்பம் என எல்லாவற்றிலும் அக்கறை செலுத்தும் பெண்கள், தங்களது உடல்நிலையை கவனிக்க மறந்துவிடுகின்றனர்.
இது அதுபோன்ற பெண்களுக்கும், அவர்களின் பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும் உதவும்.
மாதவிலக்குக் காலங்களில் நன்கு துவைக்கப்பட்டு வெயிலில் காய வைத்தத் துணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
அல்லது கடைகளில் விற்கும் பஞ்சு (அ) நாப்கின்கள் பயன்படுத்த வேண்டும்.
இதேப்போன்று அந்த சமயத்தில் பயன்படுத்தும் உள்ளாடைகளை நன்கு வெயிலில் காய வைத்துத்தான் பயன்படுத்த வேண்டும். அந்த சமயத்தில் பயன்படுத்தும் உள்ளாடைகளைத் தனியாக வைப்பது நல்லது.
சாதாரண சமயங்களில் அந்த உள்ளாடையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மாதவிலக்கு காலங்களில் வெளிப்பாடு குறைவாக இருந்தாலும் கூட 6 லிருந்து 8 மணி நேரத்திற்கு ஒரு முறை துணி அல்லது பஞ்சு (அ) நாப்கின்களை மாற்ற வேண்டும்.
சிறுநீர் மற்றும் மலம் கழிந்த பின்பு பாலுறுப்புகளை நன்கு நீரால் சுத்தம் செய்து உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மலம் கழித்த பின்பு பிறப்புறுப்பிலிருந்து ஆசனவாய் நோக்கி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மாறாக ஆசன வாயிலிருந்து பிறப்புறுப்பு நோக்கி சுத்தம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் பிறப்புறுப்புக்குள் கிருமிகள் சென்று பல்வேறு தொற்று ஏற்படும், மேலும் வயிற்றில் சீரணத்திற்கு உதவும் பாக்டீரியா வெளிவந்து பிறப்புறுப்பில் தொற்றினை ஏற்படுத்தும்.
இதனை ஒவ்வொரு தாய்மார்களும், தங்களது பெண் குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். இதனால் பெண் குழந்தைகளுக்கு அவ்வப்போது சிறுநீர் தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்.
பிறப்புறுப்புப் பகுதிகளில் இருக்கும் ரோமங்களை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
காட்டன் உள்ளாடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவரது உள்ளாடைகளை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது.
வேகமாகப் பீச்சியடித்து உடலைக் கழுவும் சாதனங்கள் வாசனை சோப்புகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்
Thanks to webdunia
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
குழந்தை, குடும்பம் என எல்லாவற்றிலும் அக்கறை செலுத்தும் பெண்கள், தங்களது உடல்நிலையை கவனிக்க மறந்துவிடுகின்றனர்.
இது அதுபோன்ற பெண்களுக்கும், அவர்களின் பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும் உதவும்.
மாதவிலக்குக் காலங்களில் நன்கு துவைக்கப்பட்டு வெயிலில் காய வைத்தத் துணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
அல்லது கடைகளில் விற்கும் பஞ்சு (அ) நாப்கின்கள் பயன்படுத்த வேண்டும்.
இதேப்போன்று அந்த சமயத்தில் பயன்படுத்தும் உள்ளாடைகளை நன்கு வெயிலில் காய வைத்துத்தான் பயன்படுத்த வேண்டும். அந்த சமயத்தில் பயன்படுத்தும் உள்ளாடைகளைத் தனியாக வைப்பது நல்லது.
சாதாரண சமயங்களில் அந்த உள்ளாடையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மாதவிலக்கு காலங்களில் வெளிப்பாடு குறைவாக இருந்தாலும் கூட 6 லிருந்து 8 மணி நேரத்திற்கு ஒரு முறை துணி அல்லது பஞ்சு (அ) நாப்கின்களை மாற்ற வேண்டும்.
சிறுநீர் மற்றும் மலம் கழிந்த பின்பு பாலுறுப்புகளை நன்கு நீரால் சுத்தம் செய்து உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மலம் கழித்த பின்பு பிறப்புறுப்பிலிருந்து ஆசனவாய் நோக்கி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மாறாக ஆசன வாயிலிருந்து பிறப்புறுப்பு நோக்கி சுத்தம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் பிறப்புறுப்புக்குள் கிருமிகள் சென்று பல்வேறு தொற்று ஏற்படும், மேலும் வயிற்றில் சீரணத்திற்கு உதவும் பாக்டீரியா வெளிவந்து பிறப்புறுப்பில் தொற்றினை ஏற்படுத்தும்.
இதனை ஒவ்வொரு தாய்மார்களும், தங்களது பெண் குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். இதனால் பெண் குழந்தைகளுக்கு அவ்வப்போது சிறுநீர் தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்.
பிறப்புறுப்புப் பகுதிகளில் இருக்கும் ரோமங்களை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
காட்டன் உள்ளாடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவரது உள்ளாடைகளை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது.
வேகமாகப் பீச்சியடித்து உடலைக் கழுவும் சாதனங்கள் வாசனை சோப்புகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்
Thanks to webdunia
மேலும் படிக்க இங்கு சுட்டவும்
Subscribe to:
Posts (Atom)