தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை ஆட்சியர், துணை பதிவாளர், மாவட்ட ஊரக மேம்பாட்டு அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி என 82 பதவிகளுக்கு குரூப்-1 தேர்வு நடந்தது.
முதன்மைத் தேர்வு 2009 அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சென்னையில் சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குருப்-1 முதன்மை தேர்வுக்காக 164 மாணவ-மாணவிகளுக்கு இலவச தங்குமிடம், உணவு வசதி அளித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதில், தற்போது 44 மாணவிகளும், 43 மாணவர்களும் ஆக மொத்தம் 87 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குருப்-1 நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வோருக்காக வரும் 21ஆம் தேதி முதல் நேர்முகத்தேர்வு முடியும் வரை தங்குமிடம், உணவு வசதி அளிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகளும், மாதிரி நேர்முகத்தேர்வுகளும் நடத்தப்படும்.
இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ- மாணவிகள் உடனடியாக தங்கள் பெயரை இந்த மையத்தில் வந்து பதிவுசெய்யுமாறு பயிற்சி மையத்தின் தலைவர் சைதை துரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் அடிப்படையிலான பணி ஒதுக்கீடு பட்டியல் நேற்று வெளியானது. இதில் மதிப்பெண் அடிப்படையில் தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் பணி என பல்வேறு பணியிடங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
குரூப்-2 தேர்வில் மொத்தம் 2,449 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் 278 பேரின் முடிவுகள் சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கான பணி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது. மீதமுள்ள 2171 பேரில் யார் யாருக்கு என்ன பணியிடம் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை ஆட்சியர், துணை பதிவாளர், மாவட்ட ஊரக மேம்பாட்டு அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி என 82 பதவிகளுக்கு குரூப்-1 தேர்வு நடந்தது.
முதன்மைத் தேர்வு 2009 அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சென்னையில் சைதை துரைசாமியின் மனிதநேய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குருப்-1 முதன்மை தேர்வுக்காக 164 மாணவ-மாணவிகளுக்கு இலவச தங்குமிடம், உணவு வசதி அளித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதில், தற்போது 44 மாணவிகளும், 43 மாணவர்களும் ஆக மொத்தம் 87 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குருப்-1 நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வோருக்காக வரும் 21ஆம் தேதி முதல் நேர்முகத்தேர்வு முடியும் வரை தங்குமிடம், உணவு வசதி அளிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகளும், மாதிரி நேர்முகத்தேர்வுகளும் நடத்தப்படும்.
இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ- மாணவிகள் உடனடியாக தங்கள் பெயரை இந்த மையத்தில் வந்து பதிவுசெய்யுமாறு பயிற்சி மையத்தின் தலைவர் சைதை துரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் அடிப்படையிலான பணி ஒதுக்கீடு பட்டியல் நேற்று வெளியானது. இதில் மதிப்பெண் அடிப்படையில் தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் பணி என பல்வேறு பணியிடங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
குரூப்-2 தேர்வில் மொத்தம் 2,449 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் 278 பேரின் முடிவுகள் சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கான பணி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது. மீதமுள்ள 2171 பேரில் யார் யாருக்கு என்ன பணியிடம் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
thanks to webdunia
2 comments:
மிகவும் நல்ல பதிவு
நன்றி
Post a Comment